ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை மன்னார் நீதிமன்றம் இரண்டு படகோட்டிகளுக்கு
2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  விடுதலை செய்யப்பட்ட 13  மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.