
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில், இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.