
தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு இன்று பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று கோடை விடுமுறை முடிவடைந்து மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லும் நிலையில் சில அரசு பள்ளிகளில் மாணவர்களை வரவேற்பதற்காக தோரணைக்கட்டி பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களை கவர்வதற்காக பள்ளிகளில் மாவிலை தோரணம் கட்டிய அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.