
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம். இதற்கு அடுத்த நாள் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல். இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் இடையில் வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் தேதி மட்டும் வேலை நாள்.
அதற்கு அடுத்தபடியாக சனி ஞாயிறு விடுமுறை. இதன் காரணமாக ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அந்த கோரிக்கையை தற்போது அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்படி ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஜனவரி 25ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.