சென்னை பெருநகர பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மற்ற இடங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மூன்று லட்சம், அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்.

சென்னை புறநகர் பகுதிகளில் 29,187 மற்றும் மாநிலத்தின் பிறப்பகுதிகளில் 57,084 என மொத்தம் 86, 271 பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025 டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.