தெலுங்கு வாரிசு திரைப்படத்தை பார்த்து இயக்குனரை அவரின் தந்தை கட்டி தழுவி வாழ்த்தி உள்ளார். 

இயக்குனர் வம்சி பைடிபள்ளி 2007 ஆம் வருடம் பிரபாஸ் நடிப்பில் வெளியான முன்னா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின் பல திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். தற்போது தமிழில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்கி உள்ளார். இது இவரின் இரண்டாவது தமிழ் திரைப்படம் ஆகும். மேலும் நேற்று முன்தினம் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்ட வாரிசு திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

இத்திரைப்படத்தை வம்சி தனது தந்தையுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்து இருக்கின்றார். படம் பார்த்து முடித்த பிறகு அவரின் அப்பா வம்சியை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீருடன் வாழ்த்தி இருக்கின்றார். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாரசுடு திரைப்படத்தை இன்று அப்பா பார்த்து மகிழ்ந்தது எனது மிகப்பெரிய சாதனை. எனது வாழ்நாள் முழுவதும் எனது மனதில் இந்த தருணத்தை போற்றுவேன். நீங்கள் தான் என் ஹீரோ அப்பா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார்.