
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும் விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தொடர் கன மழை காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் 7 ம் வகுப்பு மாணவி அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் தோழியான 7 வயது சிறுமியுடன் மழையில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆட்டோ ஓட்டுனரான அந்த 7 வயது சிறுமியின் தந்தை கண் பிரச்சனை தொடர்பாக வீட்டில் இருந்தார்.
அந்த சமயத்தில் இரு சிறுமிகளும் விளையாடிவிட்டு 7 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் தனது மகளின் கண் முன்னே 7 ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதனை பார்த்த தனது மகளை வெளியே அனுப்பிய நிலையில் அந்த சிறுமி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார்.
சிறுமியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் 7 ம் வகுப்பு மாணவியை மீட்டு ஆட்டோ டிரைவரை பிடித்து சரமாரியாக அடி கொடுத்தனர். அதன் பின் காவல்துறையினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து அவர் மீது போக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.