தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்தல் என்று சொல்லலாம். இந்த பிரச்சனை இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. நாம் வாழும் வாழ்க்கை முறை தற்போது முழுவதுமாக மாறிவிட்டது. ஷாம்புக்கள் மற்றும் எண்ணெயில் ரசாயனங்கள் கலந்து இருப்பது தெரிந்தும் கூட வேறு வழி இல்லாமல் தொடர்ந்து அதனை பயன்படுத்த வேண்டிய சூழலிலும் நிர்பந்தத்திலும் இருக்கிறோம். இதுவே முடி உதிரவோ அல்லது கொட்டவோ காரணமாக அமைகிறது.

இந்த பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லை என்றால் காலப்போக்கில் தலை சொட்டையாகவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை தடுக்கவும் கொட்டிய தலைமுடியை வேகமாக வளர வைக்கவும் ஒரு அற்புதமான வழி இருக்கிறது. வரும் 30 நாட்களில் இழந்த முடியை திரும்ப பெறுவதற்கு வெந்தய பேஸ்ட் மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை தயார்படுத்துவதற்கு தயிரும் கற்றாழையும் தேவைப்படுகிறது. உங்களின் முடியின் அளவிற்கு ஏற்ப வெந்தயத்தை எடுத்து 24 மணி நேரத்திற்கு நீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நன்கு ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு கரண்டி காற்றாலை ஜெல் மற்றும் தயிர் ஒரு கரண்டி சேர்த்து நன்கு கலந்த கலவையாக மாற்ற வேண்டும். தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செக்கு எண்ணெயை வைத்து தலையை நன்கு காய விட வேண்டும் பின்னர் குளிக்கும் போது இந்த கலவையை பூசி நன்கு தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு மூன்று முறை செய்யலாம். இதனால் தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.