சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் விவசாயியான கண்ணுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண்ணு சாமியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணுசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த கதிர்வேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.