இந்தியாவில் உள்ள பிரபலமான சிறைகளில் ஒன்று திகார் ஜெயில். பாதுகாப்புக்கு பெயர் போன திகார் ஜெயிலில் கடந்த இரண்டாம் தேதி பிரபல ரவுடியான சுனில் தில்லு தாஜ் பூரியா (32) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவரை சிறையில் இருந்த மற்ற சில ரவுடிகளான ஜிதேந்திர கோகி, யோகேஷ் துண்டா மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து 90 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தை சிறையில் பாதுகாப்புக்கு இருந்த 9 காவலர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த 9 காவலர்கள் தமிழ்நாடு பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததை அவர்களிடம் நீக்கம் செய்யப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.