தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் பாலிவுட்டிலும் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தமிழில் சூர்யா 42 திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் கடந்த வருடம் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விருது வழங்கும் விழாவுக்கு சென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய உதவியாளரை அழைத்து உடையை சரி செய்ய சொல்லி இருக்கிறார். அவரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் காலில் அவருடைய துணியின் மடிப்பை எடுத்துவிட்டு ஷூவை துடைத்து விட்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.