தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் பாலிவுட் என கலக்கி வந்த தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது டோலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. நடிகர் தனுஷ் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்து சினிமா கேரியரில் ஜெயித்தாலும் சொந்த வாழ்க்கையில் அவருக்கு சறுக்கல்கள் தான் என்று கூற வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ‌ 18 வருடங்களாக  சேர்ந்து வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீரென விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் தன் வாழ்வில் நம்பிய 4 நபர்களில் 3 பேர் தன்னை ஏமாற்றி விட்டதாக உருக்கமாக பேசியுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் தான் தன்னை ஏமாற்றாமல் இன்னமும் தன்னுடன் இருப்பதாகவும், சிலர் பெரிய வெற்றியை அடைந்தவுடன் தன்னை அவாய்ட் செய்துவிட்டு பிரிந்து விட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.