அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் K.T ராஜேந்திரா பாலாஜி, சிவகாசி உடைய பட்டாசு பாதுகாப்பு பேரவை என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தி…. எடப்பாடியாரின்  ஒப்புதலோடு எங்க தலைமையில் ஏற்படுத்தி…  பட்டாசுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ,  அங்கெல்லாம் நாங்க வந்து நிற்போம். கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள்,  அத்துமீறி வேலை பாக்குறாங்க. இதற்க்கு யார் தைரியம் கொடுத்தா? இந்த ஆட்சியுடைய தைரியம் தான்.

ஆட்சியாளர்களுடைய மெத்தன போக்கு தான். விபத்து  நடந்தால் ? அந்த தொழிலையே முடக்க வேண்டும் என்று நினைத்தால் ? அது தவறு. 1500 பட்டாசு ஃபேக்ட்ரிகளில் வேலைக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். என்ன காரணாம் என்று சொன்னால் ? அதிகாரியுடைய டார்ச்சர்கள் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் நிறுத்திக்கோங்க.

நிறுத்தவில்லை என்று சொன்னால் ? இதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையை அண்ணா திமுக சார்பாக… சிவகாசி பட்டாசு பாதுகாப்பு பேரவை உடைய அமைப்பை உருவாக்கி…  மிகப் பெரிய அளவிலே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க ஆட்சியின்  தற்போது சூழ்நிலை சரியில்லை. ஏதோ ஆட்சி நடக்கிறது… எடப்பாடி அவருடைய தலைமையில் அவர் விரல் நீட்டுகின்றவர் பிரதமராக வரவேண்டும் அல்லது அவரே பிரதமராக வரவேண்டும். நான் இதை சொன்ன உடனே,  இன்றைக்கு சில பேர்  நக்கல், ஜோக்கு, என்று சொல்லுகிறார்கள்.

ஒரே எம்.பி ஆக இருந்த ஐ.கே குஜரால் இந்தியாவுடைய பிரதமராகவில்லையா ? சந்திரசேகர்  பிரதமராகவில்லையா ? கர்நாடகா தேவகவுடா  பிரதமராகவில்லையா ?  10 எம்பிக்களை வைத்திருந்தவர்கள்… ஒத்த MP வைத்திருந்தவர்கள் எல்லாம் பிரதமராக வரும் பொழுது….  ரெண்டேகால் கோடி  உறுப்பினர்களை வைத்திருகின்ற அண்ணா திமுக உடைய பொதுச்செயலாளர் ஏன் வர முடியாது ?

இந்தியாவிலேயே மூன்றாவதாக பெரிய கட்சியாக  பார்லிமென்ட்டில்  உட்கார வைத்த தலைவி புரட்சித்தலைவி அம்மா. மிகப்பெரிய கட்சியாக அங்கீகரித்தார்கள். அப்படிப்பட்ட இயக்கம் விழுந்து விடுமா ?  வீழ்ந்து விடும் என்று கனவு காண்பவர்கள்,  பகல் கனவு காணாதீர்கள்…  அண்ணா திமுக புது உத்தியோகத்தோடு, புது எழுச்சியோடு மீண்டும் எழுந்து வரும். பாராளுமன்ற தேர்தல் நாற்பதில் வெல்வோம். அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் வெல்வோம் என்று சொல்லி இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். வெற்றியை தாருங்கள்.  உங்களுக்கு உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.