மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஒரு சில கட்சியினர் மற்ற கட்சியிலும் இணைந்து வருகிறார்கள். நேற்று திமுக தன்னுடைய தொகுதி பங்கீடு நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவுமக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்று இரவு அறிவித்துள்ளன.

இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை அளித்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், SDPI, அகில இந்திய ஃபார்வாட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவும் இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.