கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா அருகே மூலமட்டம் பகுதியை சேர்ந்த மாணவி அமலா (25). இவர் அதே பகுதியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பயன்பாட்டில் உள்ள பேனாக்களுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்தாத பேனாக்களை உருவாக்க நினைத்துள்ளார். அதற்காக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத புதிய வகை பேனாக்களை கண்டுபிடித்துள்ளார்.

அந்த பேனாவிற்கு கேரளா அரசு தகுதிச் சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் அவரது புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 2 லட்சம் பரிசு தொகையும் வழங்கியுள்ளது.

மாணவி உருவாக்கிய பேனாக்களின் விலை ரூபாய் 15, ரூபாய் 20 என்ற இரு வகையான பேனாக்கள் உள்ளன. அதனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமலாவின் புதிய கண்டுபிடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.