மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விவரங்கள் அப்டேட் பற்றி ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்தும் பணம் களவாடப்பட்டுள்ளது.

வங்கியில் கேஒய்சி, பான் விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் முக்கியம் என்பதால், இந்த மோசடி கும்பல் வலையில் 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் விழுந்துள்ளனர். இந்நிலையில் மும்பை காவல் அதிகாரிகள் மக்களுக்கு வங்கி தரவுகள் பற்றி வரும் மெசேஜ்-ல் உள்ள லிங்க்-களை கிளிக் செய்யக்கூடாது என ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 40 நபர்களில் டிவி நடிகை சுவேதா மேனனும் ஒருவர் ஆவார். இவர் அளித்த புகாரின் படி இந்த போலி மெசேஜ்-ல் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து தகவல்களை பதிவுசெய்தடனே வங்கி தரப்பிலிருந்து அழைப்பு வந்ததாகவும், இந்த அழைப்பில் பேசியவர் ஒடிபியை பதிவிட சொன்னதால் பதிவிட்ட அடுத்த சில நிமிடத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 57,636 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.