மு.மாறன் டைரக்டில் உதயநிதி நடித்திருக்கும் திரைப்படம் “கண்ணை நம்பாதே”. இதில் கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க, முக்கியமான வேடங்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் மார்ச் 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது. இந்த படம் குறித்து உதயநிதி கூறியதாவது, “கிரைம் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க எனக்கு ஆசை. இது அப்படி அமைந்த திரைப்படம்தான்.

4 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் கொரோனாவால் தாமதமாகி விட்டது. நான் ஒரே பாடலில் உயரவில்லை, நான்கரை வருடங்கள் உழைத்து தான் அமைச்சர் ஆனேன். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலிருந்து வெளியில் வந்து விட்டேன். இப்போது அதை அர்ஜுன் துரை மற்றும் செண்பகமூர்த்தி போன்றோர் தான் பார்த்துக்கொள்கின்றனர். இனிமேல் சினிமா குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்” என்று உதயநிதி தெரிவித்தார்.