
தென்மேற்கு ரயில்வேதுறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க சார்ஜிங் வசதிகள் செய்யப்படுகிறது. பெங்களூரின் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில், சார்ஜிங் வசதி செய்யப்படும். முதல்கட்டமாக பெங்களூரு மண்டலத்தின் 20 ரயில் நிலையங்களில், இந்த வசதி செய்யப்படும்.
2-ஆம் கட்டத்தில் மற்ற நிலையங்களிலும் இவ்வசதி செய்யப்படும். இத்திட்டத்துக்காக டெண்டர் அழைக்கப்படும். ஒப்பந்தம் பெறுவோர் ரயில்வே துறைக்கு உரிமதொகை செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து மின்சார சார்ஜிங் இயந்திரம் பொருத்தி, நிர்வகித்து வாகன பயணியரிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.