சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர்களில் ஒருவர் தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர். இந்த நிகழ்ச்சிக்கு பின் ராஜலட்சுமி என்ன மச்சான் சொல்லு புள்ள எனும் பாடலை பாடியதன் வாயிலாக மிகவும் பிரபலமானார். மேலும் தன் கணவர் செந்திலுடன் சேர்ந்து வெளிநாடு சென்றும் பாடி வருகிறார். அதோடு புஷ்பா திரைப்படத்தில் வாயா சாமி எனும் பாடலை பாடி பெரிய ரீச் பெற்றார் ராஜலட்சுமி. இப்போது செந்தில்-ராஜலட்சுமி இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி தற்போது License என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதனிடையே ராஜலட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுடைய தொழிலில் நிறைய சவால்கள் இருக்கிறது. இதுதவிர வாழ்க்கையிலும் பிரச்சனை உள்ளது. நாங்கள் நன்கு வளர்ந்து விட்டோம் என்றெல்லாம் விமர்சனம் வருகிறது. வீடு-கார் என அனைத்தும் நாங்கள் லோன் போட்டுதான் வாங்கினோம்.

கொரோனா காலக்கட்டத்தில் நிகழ்ச்சியில்லை, கையில் பணமும் இல்லை. அதையெல்லாம் கடந்துதான் இப்போது வாழ்ந்து வருகிறோம். கடன் வாங்கி செலவு செய்திருக்கிறோம். இதற்கிடையில் கொரோனா காலக்கட்ட சூழல் போல் வந்தால் என்ன செய்வது என கணவரிடம் கேட்டேன். அதற்கு அவர் லோன் கட்ட முடியவில்லை எனில் பேங்குக்கு கொடுத்து விட்டு நம்ம கிராமத்திலுள்ள சொந்த வீட்டுக்கு போலாம் என்று கூறுவார். ஆகவே எங்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என கூறியிருக்கிறார் ராஜலட்சுமி.