தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் ஏறும் தொழிலாளி. நேற்று முன்தினம் வெங்கடேசன் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் கோழிக்கு ஊற்றும் மருந்தை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்து விட்டார்.

இதனையடுத்து மயங்கி விழுந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.