தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரூர் அரசு மருத்துவமனையில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது மாணவி தேர்வு எழுத வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.