கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார்.

அதனால் தான் சென்னையில் அரசு குடியிருப்பில் வசித்து வருவதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறியவர் சட்டப்பேரவையில் இது குறித்து பேசும்போது அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று அவர் வினவியுள்ளார்.