ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பரப்புரை எனும் பெயரில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகளை நன்றாக உணர்ந்த நிலையில், தோல்வி பயந்ததால் இபிஎஸ் பச்சை பொய்களை மக்கள் மனதில் விதைக்க முயன்று உள்ளார். ஊழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுவது, யோக்கியவன் வருகிறான் சொம்பு எடுத்து உள்ளே வை என்பது போன்று இருக்கிறது. இபிஎஸ்-க்கு எந்த வித தகுதியும் இல்லை. இபிஎஸ் ஆட்சியில் நிகழ்ந்த கலெக்ஷன், கரப்பசன், கமிஷன் செயலால்தான் அதிமுக ஆட்சி வீட்டிற்கு அனுப்பட்டது. அதிமுகவுக்கு தக்கபாடத்தை இடைத்தேர்தல் புகட்டும்” என அமைச்சர் தெரிவித்தார்.