
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்துக்கள், சிறுபான்மையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்துள்ளார். இதனால் இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு இஸ்கான் அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில் மற்றும் காளி மாதா கோவில் ஆகிய 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்கான் செய்தி தொடர்பாளரான ராதாரம் தாஸ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் கூறியதாவது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அது எப்போது நிறுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் துளசி கபாத் ஆகிய இருவரையும் டேக் செய்துள்ளார்.