திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்தி, நிவாஸ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.