அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இந்தியாவிலேயே எல்லோருக்கும் எல்லா மதத்தையும் பின்பற்ற  உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மதத்தை இன்னொருத்தர் துன்புறுத்தக் கூடாது. உனக்கு பிடிக்காலனா நீ போ….  எல்லாம் மதத்திலேயும் நல்லது இருக்குது..சில தேவையற்றதும் இருக்கிறது.

அதுக்காக நீ சொல்றது எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது. நானும் தான் இந்து மதத்தில் இருக்கேன். அதனால சொல்ற எல்லாத்தையும் நான் ஏத்துக்கலையே… போடா வெண்ணனு போயிடுவேன்.. அதுக்காக உன்னுடைய அரசியல் பிழைப்பை நடத்துவதற்காக….  ஸ்டாலினுக்கு பிறகு நீ அந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக….  குலதொழிலின்  அடிப்படையில் முதலமைச்சராக  வரவேண்டும் என்பதற்காக…

உன் நிலையை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக….. பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக….. உன்னை விளம்பரத்தை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக…. மத விரிசலை….இன்னொரு மத்தை புண்படுத்துகின்ற… இந்திய அரசியலமைப்புக்கு எதிராக பேசுகின்ற….  அரசியலமைப்பின் பேரிலேயே உறுதிமொழி எடுத்துக்கிற ஒரு அமைச்சராக இருக்கின்ற நீ  இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதியை சரமாரியாக ஒருமையில் பேசினார்.