மருத்துவர்களின் அயராத சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தன்னலம் கருதாது மற்றவர்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றிய மருத்துவர்களை நினைவு கூறுவது அனைவரின் கடமையாகும்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ தினத்தை முன்னிட்டு “தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல் நலனும் உள்ள நலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் நாள் வாழ்த்துக்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கழக அரசு மருத்துவர்கள் நலனுக்காக அனைத்தையும் செய்து கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.