உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக அதாவது 1186 ஆவது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக்கியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தும் பயனில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போர் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் கிட்டத்தட்ட 266 ட்ரோன்கள் 45 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த மே 20ஆம் தேதி நடந்தது. குர்ஸ்க் பகுதியில் அதிபர் புடின் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பாதையை நோக்கி ட்ரோன் ஒன்று வந்துள்ளது. அதனை இடம் மறைத்து ரஷ்ய வான் பாதுகாப்பு படை அளித்தது. இதன் மூலம் ஹெலிகாப்டரில் இருந்த புடின் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதை வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் வானிலையில் உக்ரைன் ட்ரான்கள் எவ்வாறு நுழைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ட்ரோன் தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் புடின் இருந்த நிலையில் இது குறித்து உக்ரைபே அரசோ, ராணுவமும் எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.