
லண்டனில் 2025 இந்தியா குளோபல் ஃபார்ம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்கான் துறவி கௌரங்கதாஸ் உரையாடிய போது தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். சமூக சீர்திருத்தவாதியான இவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் ஐஐடி கல்லூரியில் பயின்றுள்ளார்.
அது குறித்து அவர் பேசும் போது, “நானும் சுந்தர் பிச்சையும் ஐஐடியில் ஒன்றாக படித்தோம். ஆனால் கல்லூரி நாட்களில் நாங்கள் சந்தித்துக் கொண்டதில்லை. பட்ட படிப்பிற்கு பிறகு நாங்கள் பேசி கொண்டோம் . அப்போது சுந்தர் பிச்சை என்னை பார்த்து “நீங்கள் என்னை விட இளமையாக தோற்றமளிக்கிறீர்கள்” என்று கூறினார். அதற்கு நான் “நீங்கள் டிஜிட்டலை நம்பி வாழ்கிறீர்கள். அது தரும் மன அழுத்தத்தால் இவ்வாறு இருக்கிறீர்கள்”.ஆனால் நான் கடவுளை நம்பி இருக்கிறேன். அது எனக்கு மன அமைதியை தருகிறது” என்று கூறியுள்ளார்.
ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் கல்வியாளரான கெளரங்கதாஸ் ஐஐடி மும்பையில் பி. டெக் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் தன்னுடைய இளமையான தோற்றத்திற்கு காரணம் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை தான் என்று கூறினார். தனது வாழ்வில் சுந்தர் பிச்சையுடன் நடந்த இந்த சம்பவத்தை வைத்து சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலான மக்கள் மனநல பிரச்சனைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சிந்திக்க வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் 230 மில்லியன் மக்கள் தினந்தோறும் அடிமையாகி வருகின்றனர். இதில் 70 % இளைஞர்கள் மட்டும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் இணையத்தில் செலவிடுவதாக கூறப்படுகிறது. இதில் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர் அதிகம் என்றும் கெளரங்கதாஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் தளங்கள் மூலம் வரும் இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்றும், கௌரங்கதாஸின் கருத்து நியாயமானவை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.