ராமநாதபுரம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள நிலையில் தேவர் குரு பூஜையில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இபிஎஸ் தொடர்புடைய போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.