சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியின் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா கௌதம் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அர்ச்சனா கெளதம் பிரியங்கா காந்தியை சந்திப்பதற்காக சென்ற போது பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்திப் சிங் அர்ச்சனாவை ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதோடு அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தற்போது அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் மீரட் காவல்துறையினர் சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.