மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான செயற்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.