CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. CBSE பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.