ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவர் சிரமப்பட்டு வருவதால் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்.