கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்காட்டு விளை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் இருப்பவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மது போதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜை குடும்பத்தினர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.