சமூக வலைதளங்களில் ரஜினி விஜய் ரசிகர்கள் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவிற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் 15 நொடிகளில் அனைத்தும் புக் செய்யப்பட்டது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியுடன் ரஜினி ரசிகர்களுக்கு இடையேயும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயும் மோதல்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு  ஆட்கள் இல்லாத காரணத்தினால் தான் ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், லியோ ஆடியோ வெளியீட்டு  விழாவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று போகுமே தவிர ஒருவருக்கு கூட இலவசமாக டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ரஜினி ரசிகர்களை விஜய் ரசிகர்கள் வம்புக்கு இழுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து  பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில்    நடைபெற்ற சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு ரஜினி ரசிகர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், டிக்கெட்-க்கான  பணத்தை வாங்கிவிட்டு உள்ளே விடாமல் அடித்து துரத்தும் விஜய்-க்கு பதிலாக இலவசமாக ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் ரஜினி எவ்வளவோ மேல் என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.