ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தற்பொழுது தெலுங்கு தேச கட்சியினர் பைக் பேரணி தொடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு பைக் பேரணி  மூலம் சென்று திறக்கப்பட்ட கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடச் சொல்லி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளனர்.

தற்போது குப்பம் பகுதி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திடீரென வந்த வாகனத்தை அடித்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அது மட்டுமல்லாமல் தனியார் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் நுழைந்து, தொழிலாளர்களை வெளியேற்றி தொழிற்சாலைக்கு விடுமுறை விட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.