சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் போல செயல்படுவதாகவும், சிறுநீரக சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லாமல் பொது மருத்துவர்கள் மருந்துகளை தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோல இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மதுரை போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.