தமிழக பாஜக கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆட்சி வந்த பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன் தற்போது பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து சிவபாலன் திமுகவில் சேர்ந்து கொண்டார்.

இது குறித்து சிவபாலன் கூறும்போது, பாஜகவில் பல வருடங்களாக வேலை பார்த்தவர்களுக்கு மரியாதையே இல்லை. சோசியல் மீடியாவில் ஒரு சிலர் செய்யும் வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாநில அரசின் செயல்பாடுகளை பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு தற்போது திமுகவில் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் இந்து சகோதரர்களை திமுக ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது எனவும் அவர்களின் வாழ்க்கைக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் செய்து கொடுக்கவில்லை எனவும் அதனால் தான் தற்போது திமுகவில் இணைகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.