ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குழந்தை பிறப்பதைஅந்த நாட்டு அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. கடந்த வருடம் குழந்தை பிறப்பின் விகிதம் 2.1 ஆக இருந்த நிலையில் தற்போது 1.5 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிபர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அலுவலகங்களில் வேலை பார்க்கும் போது காபி இடைவேளை மற்றும் உணவு இடைவேளையை பயன்படுத்தி உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் என்பது குறைந்து வரும் நிலையில் இறப்பு விகிதமானது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டு அரசு குழந்தை பிறப்பை ஊக்குவிக்க பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இலவசமாக குழந்தை பிறப்பு குறித்து மருத்துவ சோதனை செய்து கொள்வது, முதலாளிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பெண்களிடம் குழந்தை பிறப்பு குறித்து ஊக்குவித்தல், கருக்கலைப்புக்கு தடை விதித்தல், விவாகரத்து கோரும் போது அதற்கான தொகையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அந்த வகையில் தற்போது உணவு இடைவேளை மற்றும் காபி இடைவேளையில் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.