
ராமேஸ்வரத்திலிருந்து இரவு சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் அருகே வந்தது. 23 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கடைசி 3 பெட்டிகள் மட்டும் திடீரெனகழன்று ஓடியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக கீழே இறங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழன்ற ரயில் பெட்டிகளை மீண்டும் ரயிலுடன் இணைத்தனர். இதன் பிறகு சேது எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாகி மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.