தமிழக முதல்வர் ஸ்டாலினை அர்ஜுனன் ஆகவும் உதயநிதி ஸ்டாலினை கிருஷ்ணராகவும் சித்தரித்து திமுகவினர் வைத்த பேனர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தின் ரிலீஸை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர். பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவை எல்லாம் திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விட்டு திருப்பூர் முழுவதும் தற்போது பேனர் வைத்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட்சியினர் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.