அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று மாலையே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படலாம். நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு எவரும் அடைய முடியாது என்று ஓபிஎஸ் தரப்பு தங்கள் வாதத்தை முன் வைத்தனர். நீதிபதி குமரேஷ்பாபு இந்த மனுவை விசாரித்து வருகின்றார். இபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயணனும், ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் பி எஸ் ராமன், ஸ்ரீராம் மற்றும் மணிசங்கர் ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது.