சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், தைரியமா இருங்க என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்  தமிழில் டுவிட் செய்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியின் காரணமாக தமிழகத்தில்  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதி கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்து, மக்களின்  இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது. சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க” என தமிழில் ட்விட் செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை அணிக்காகவும் ஆடி உள்ளார். அப்போதிலிருந்து அவர்  அடிக்கடி தமிழில் ட்விட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.