தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் தீவிரம் அடைந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.