பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெரும் அதிர்ச்சி…!! “தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி”… 5 வயது சிறுவனை கல்லால் அடித்தே கொன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் போல்தேவ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த…
Read moreவீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறாங்க…! “திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்”… மனவேதனையில் இருந்த பெண் போலீஸ்… துணி காய போடுவதாக சொல்லிவிட்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் தற்போது சென்னை…
Read more