பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம் முகவரி கேட்பது போல நடித்து 5 பவுன் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அகிலாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
காதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.…
Read moreபீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…
Read more