காஞ்சிபுரத்தில் மொபைல் கடை ஒன்றில் தங்களது கைவரிசையை வட மாநிலத்தவர்கள் காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹீம். சில தினங்களுக்கு முன்பாக இவரது செல்போன் கடை கதவு உடைக்கப்பட்டு ரூபாய் 43 லட்சம் மதிப்பிலான மொபைல்  ஃபோன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் தங்களது விசாரணையை தொடங்கினர். இதைத் தொடர்ந்து,

குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 234 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து மேற்கொண்ட  விசாரணையில், அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரியவர, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரையும்  சிறையில் அடைத்தனர்.