சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிரண் தன்னுடன் படிக்கும் கணேஷ்(21), தேவி(21) ஆகியோருடன் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த நேரத்தில் பெண்ணுடன் தனியாக அமர்ந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சப் இன்ஸ்பெக்டர் உங்களை அழைத்து வர சொன்னார் என கூறி கிரணை மட்டும் அவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

முன்னதாக கிரண் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு வருமாறு அந்த நபர் தெரிவித்தார். இதனால் கிரண் தனது தங்க சங்கிலியை கழற்றி காரில் வைத்துவிட்டு அவருடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் கிரணை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் கிரண் காருக்கு வந்து பார்த்தபோது தங்க நகை கனவு போனதை கண்ட அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிரண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.