சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதியும் தொடங்கியிருக்கிறது.

அட்மிட் கார்டு இல்லாதவர்கள் பரிட்சை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இதில் 18 லட்சம் பேர் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆவர். அதேபோல் 12ஆம் வகுப்பிலிருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.